Breaking News
தேசியகொடியை ஏற்றுவதில் தவறு செய்த அமித்ஷா: பாரதமாதா வருத்தத்தில் இருக்கிறாள், அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கு

டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்ற தேசிய தலைவர் அமித்ஷா, கம்பத்தில் தேசியகொடியை ஏற்றினார். அப்போது தவறுதலாக தேசியகொடி கீழ்நோக்கி வந்து விழுந்தது. உடனே கட்சி நிர்வாகிகள் கூச்சலிட்டதால், சுதாரித்துக்கொண்ட அவர் தேசியகொடியை மேலே ஏற்றினார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தேசியகொடியை ஏற்றுவதில் தவறு செய்த அமித்ஷா குறித்து ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, ”இயற்கையானது விசித்திரமான வழிகளில் வேலை செய்கிறது. நாம் எவ்வளவு பெரிய வலிமையானவர்களாக இருந்தாலும் இயற்கையின் முன்னால் வணங்கியாக வேண்டும். அமித்ஷாவின் கையால் கொடிக்கம்பத்தில் ஏற மூவர்ணக்கொடி மறுத்துள்ளது. மூவர்ணக்கொடியின் மூலம் நம் பாரதமாதா தான் வருத்தத்தில் இருப்பதாக கூறுகிறாள்” எனக் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.