Breaking News
ஆசிய விளையாட்டு போட்டி : இந்தியாவுக்கு 5வது தங்கம்

இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்கு இன்று இந்திய வீரர்கள் ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளனர்.

இன்று (ஆக., 24) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் படகுப் போட்டியில் இந்திய வீரர் துஷ்யந்த் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். தொடர்ந்து இரட்டையர் படகுப் போட்டி பிரிவில் இந்தியாவின் ரோஹித் குமார் மற்றும் பகவான் தாஸ் ஜோடியும் வெண்கல பதக்கம் வென்றது. இதன் மூலம் இந்தியாவின் பதக்கம் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா பெறும் 12 வது வெண்கல பதக்கம் இதுவாகும். படகுப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி தங்க பதக்கம் வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 12 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 21 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 10 வது இடத்தில் உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.