Breaking News
ரயில் விபத்தில் 50 பேர் பலி ?

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 50 பேர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இது குறித்து கூறப்படுவதாவது: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள ஜோடாபதக் என்னுமிடத்தில் தசாரா விழா கொண்டாடப்பட்டு வந்தது. ரயில் தண்டவாளம் அருகே, விழாவில் கலந்து கொண்ட மக்கள் குவிந்திருந்தனர். இந்நிலையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வந்த நிலையில், அதிலிருந்து தப்பிப்பதற்காக ரயில் பாதை அருகே மக்கள் ஒடினர் , அப்போது அவ்வழியே வந்த ரயில் மக்களின் மீது மோதியது.இச்சம்பவத்தில் 100பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முதற்கட்டமாக 50 வரை என பலியாகி இருக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.