Breaking News
ஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்கு விமானம் கொண்டுசென்றதற்கு விமானப் படைக்கு கட்டணமாக ஓபிஎஸ் ரூ.14.91லட்சம் செலுத்தியதாக தகவல்

அவசர மருத்துவ சிகிச்சைக்காக, தமது சகோதரரை மதுரையில் இருந்து சென்னைக்கு விமானப்படை ராணுவ விமானத்தின் மூலம் கொண்டுசென்றதற்கு கட்டணமாக, 14 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயை, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செலுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓபிஎஸ்-சின் சகோதரர் ஓ.பாலமுருகன், கடந்த ஜூலை 1ஆம் தேதி “ஏஎன்-32” விமானத்தின் மூலம் அவசர மருத்துவ சிகிச்சைக்காக மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதற்கான கட்டணத் தொகைக்கான பில், விமானப் படை தலைமையகத்தில், ஜூலை 26ஆம் தேதி பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக, ஓபிஎஸ் டெல்லி சென்று, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க முடியாமல் திரும்பினார். பில் அனுப்பப்பட்ட பிறகு மாநில அரசின் கணக்கு மூலம் கட்டணத் தொகையான 14 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் ஆகஸ்ட் 14ஆம் தேதி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு கேட்டு, பாதுகாப்புத் துறை அமைச்சகம் அனுமதி அளித்து, விமானப்படை விமானம் அனுப்பப்பட்டதால், மாநில அரசின் மூலம் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.