Breaking News
சிகிச்சைக்காக விஜயகாந்த் 15 நாளில் வெளிநாடு செல்வார் – பிரேமலதா

தே.மு.தி.க. தலைமை கழகத்தில் இன்று பொருளாளர் பிரேமலதா தலைமையில் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். அப்போது பிரேமலதா பேசியதாவது:-

இப்போது எல்லோரும் ‘மீடூ’ பற்றி பேசுகிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் நெருப்பாக இருந்தால் ‘மீடூ’ எப்படி வரும்.

தே.மு.தி.க.வை குடும்ப கட்சி என்று சொல்வார்களோ? என்று யாரும் நினைக்க வேண்டாம். அதைப் பற்றி கவலை கொள்ளத் தேவை இல்லை.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருக்கிறார். இன்னும் 15 நாளில் அவர் வெளிநாடு செல்வார்.

அவர் மீண்டும் சிங்கம் போல் எழுந்து வருவார். தி.மு.க.-அ.தி.மு.க.வுக்கு மாற்று கட்சி தே.மு.தி.க. தான் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

இவ்வாறு பிரேமலதா பேசினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.