Breaking News
புகழ் பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார்

சென்னையில் ஆதம்பாக்கத்தில் வசித்து வந்தவர் புகழ் பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் (வயது 88). இவர் தனது இல்லத்தில் உடல் நல குறைவால் இன்று காலமானார்.

திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்த இவர் கடந்த 2009ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றவர். கடந்த 1987 முதல் 1991 வரை தினமணி பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

தமிழ்பிராமி கல்வெட்டுகளில் ஆராய்ச்சி செய்துள்ள இவர் வித்யாசாகர் கல்வி அறக்கட்டளை நடத்தி வந்துள்ளார். சிந்துசமவெளி எழுத்துகளுக்கும், திராவிட மொழி குடும்பத்துக்கும் உள்ள உறவினை சொன்னவர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.