Breaking News
கழிவுநீர் தொட்டியை சரிசெய்ய முயன்றபோது மண் சரிவில் சிக்கித் தவித்த இளைஞர்: 7 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்பு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்ட நீர் கசிவை சரிசெய்ய 20 அடி பள்ளத்தில் இறங்கியபோது மண் சரிந்து வடமாநில இளைஞர் ஒருவர் சிக்கினர். பின்னர், 7 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்பு வீரர்களால் அவர் மீட்கப்பட்டார்.

திருத்தங்கல் அருகே தனி யாருக்குச் சொந்தமான இறகுப் பந்து மைதானத்தை ஒட்டி கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி உள்ளது. இதில், ஏற்பட்ட நீர் கசிவை சரிசெய்வதற்காக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீபால் (42) என்பவர் சுமார் 20 அடி பள்ளத்தில் இறங்கி, நேற்று காலை வேலைசெய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டு ஸ்ரீபால் அதில் சிக்கிக்கொண்டார். இதுகுறித்து, சிவகாசி மற்றும் விருதுநகர் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மண் சரிவில் சிக்கிக் கொண்ட ஸ்ரீபாலை மீட்க கடும் முயற்சி மேற்கொண்டனர். அவரது இடுப்புக்குக் கீழ் பகுதி முழுவதும் சேற்றில் சிக்கிக் கொண்டதால் அவரால் உடலை அசைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து 7 மணி நேரம் வரை முயன்று, மண் சரிவில் சிக்கி போராடிய ஸ்ரீபாலை மீட்டனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.