Breaking News
தென் மண்டல எறிபந்து போட்டி – சென்னையில் இன்று தொடக்கம்

லட்சுமி நகர் மற்றும் பினாக்கிள் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 13-வது தென் மண்டல எறிபந்து சாம்பியன்ஷிப் (இருபாலருக்கும்) போட்டி சென்னை நங்கநல்லூர் லட்சுமி நகர் 7-வது தெருவில் உள்ள மைதானத்தில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி ஆகிய அணிகள் பங்கேற்று மோதுகின்றன. தொடக்க விழாவில் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. எம்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்த தகவலை போட்டி அமைப்பு குழு செயலாளர் எம்.அழகேசன் தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.