Breaking News
ரபேல் ஒப்பந்தம்: பார்லி.,யில் சிஏஜி அறிக்கை தாக்கல்

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக லோக்சபாவில் சிஏஜி அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய நிதித்துறை அமைச்சக இணையமைச்சர் என்ற முறையில் பொன்.ராதாகிருஷ்ணன் சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். ரபேல் விவகாரம் தொடர்பாக பட்ஜெட் கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் முடக்கி வந்தன. இந்நிலையில் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று, சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சிஏஜி அறிக்கை லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று மாலை (பிப்.,13) 3.30 மணியளவில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து விரிவாக பேச உள்ளதாக காங்., தலைவர் ராகுல் அறிவித்துள்ளார். ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக ஆங்கில செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தொடர்பாகவும், அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பேச உள்ளதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.