Breaking News
கிரண்பேடியை மாற்றனும்: உள்துறை அமைச்சகத்திற்கு புதுச்சேரி சபாநாயகர் கடிதம்

புதுச்சேரி துணைநிலை கவர்னராக உள்ள கிரண்பேடியை மாற்றக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் வைத்தியலிங்கம் கடிதம் எழுதி உள்ளார்.

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக கவர்னர் மாளிகை முன், கருப்பு சட்டை அணிந்து முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். கிரண்பேடி மீது நாராயணசாமியும், நாராயணசாமி மீது கிரண்பேடியும் மாறி மாறி நேற்று குற்றம்சாட்டினர். 3வது நாளாக இன்றும் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கவர்னர் கிரண்பேடியை மாற்றக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் வைத்தியலிங்கம் கடிதம் எழுதி உள்ளார். அதில், கிரண்பேடி விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அரசில் கவர்னர் கிரண்பேடியின் தலையீடு அதிகமாக உள்ளது. புதுச்சேரியில் அசாதாரண சூழல் நிலவுவதால், சட்ட ஒழுங்கை பாதுகாக்க புதுச்சேரிக்கு இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டும். தற்போதைய அசாதாரண சூழலை எதிர்கொண்டு, நிர்வாகத்தை செம்மைப்படுத்தும் திறமையான இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.