Breaking News
தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க நேரக்கட்டுப்பாடு விதிக்க முடிவு

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் அமைந்துள்ள தாஜ்மஹால் மொகலாய மன்னர் ஷாஜஹானால், அவரது மனைவி மும்தாஜின் நினைவாக 17-ம் நூற்றாண்டில் யமுனை ஆற்றங்கரையில் உருவாக்கப்பட்டது.

தாஜ்மஹாலின் அழகை காண நாள்தோறும், உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தாஜ்மஹாலை சுற்றிப்பாக்க நேரக்கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தாஜ்மஹாலில் 3 மணிநேரம் மட்டுமே சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தாஜ்மஹாலை சுற்றிப்பாக்க நேரக்கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.