Breaking News
இன்று சசிகலா சரண்? : பெங்களூருவில் உச்சகட்ட பாதுகாப்பு


சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா இன்று சரணடைவார் என்று எதிர்பர்க்கப்படுகிறது. இதன் காரணமாக பெங்களூருவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி அஸ்வத் நாராயணா முன்பாக சரணடைய வேண்டும் என்று அந்நீதிமன்றதின் பதிவாளர் உத்தரவிட்டிருந்தார். இதற்காக அந்த நீதிமன்றத்தில் அறை எண் 48ல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. இதனால், பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்ற வளாகம் மற்றும் பரப்பன அக்ரஹாரா சிறை ஆகிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நன்றி : தினமலர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.