Breaking News
இந்திய புதிய கடற்படை தளபதி ஹரிகுமார் பதவியேற்பு

புதுடில்லி: இந்தியாவின் புதிய கடற்படை தளபதியாக ஹரிகுமார் பதவியேற்றார். அவருக்கு கடற்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்து வரவேற்றனர்.

 

latest tamil news

 

ஏற்கனவே கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் கே.பி.சிங் பதவிக்காலம் முடிவுறுவதை அடுத்து துணை அட்மிரல் ஹரிகுமார் புதிய தளபதியாக நியமனம் செய்யப்பட்டார். டில்லியில் உள்ள தெற்குபிளாக்கில் நடந்த விழாவில் அவர் தளபதியாக பொறுப்பேற்றார். அவரை கடற்படை அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

latest tamil news

 

பதவியேற்பு விழாவில் ஹரிகுமாரின் தாயார் ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். “இது எனக்கு பெருமை தரும் பதவியாகும். எனது முன்னாள் அதிகாரிகளின் நடவடிக்கைகளை பின்பற்றி மேலும் சிறப்பாக பணியாற்றுவேன் ” என்றார்.
ஹரிகுமார் பல்வேறு விருதுகளை பெற்றவர். இவர் கடற்படையில் 38 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.