Breaking News
கார்ல்சனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

புதுடில்லி: ஆன்லைன் ரேபிட் செஸ் தொடரில், உலக சாம்பியன் கார்ல்சென்னை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.

16 வீரர்கள் பங்கேற்ற ஆன்லைன் ரேபிட் சென்ஸ் தொடர் நடந்து வருகிறது. இன்று நடந்த 5வது சுற்றில், சென்னையை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, நார்வேயை சேர்ந்த உலக சாம்பியனும், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள கார்ல்சன்னை எதிர் கொண்டார். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 40வது நகர்த்தலின் போது வெற்றியை தன்வசமாக்கினார்.

latest tamil news

இதற்கு முன்னர், பிப் மாதம் ஆன்லைன் வாயிலாக டந்த ஏர் திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் 8 வது சுற்றில் கார்ல்சனை, 16 வயது நிரம்பிய பிரக்ஞானந்தா தோற்கடித்திருந்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.