Breaking News
சென்னையில் மின்சார ரயில் விபத்து: மூவர் பலி; 4 பேருக்கு தீவிர சிகிச்சை

சென்னையில் மின்சார விரைவு ரயிலில் படியில் தொங்கியபடி பயணம் செய்த 3 பேர் மின்கம்பம் மோதி, கீழே விழுந்ததில் உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு – சென்னை கடற்கரை மின்சார ரயில் பரங்கிமலை அருகே வந்த போது அதில் படியில் தொங்கியபடி பயணம் செய்த 3 பேர் மின்கம்பம் மோதி, கீழே விழுந்ததில் உயிரிழந்தனர். இதில் ஒருவர் பெருங்களத்தூரைச் சார்ந்த பிரவீன் என்று தெரியவந்துள்ளது. இவர் துறைமுகத்தில் ஊழியராகப் பணிபுரிகிறார்.

படியில் தொங்கியபடி பயணம் செய்த மேலும் 4 பேர் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து ஏற்பட்ட பரங்கிமலையில் குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

விபத்து குறித்து ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி : தி இந்து தமிழ்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.