Breaking News
மணிப்பூரில் அடுத்தடுத்து நிலஅதிர்வு

மணிப்பூர் சட்டசபைக்கான முதல்கட்ட தேர்தல் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு காலை முதல் அடுத்தடுத்து நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.

அதிகாலையில் சண்டல் மாவட்டத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது. தொடர்ந்து 9 மணியளவில் இந்தியா – மியான்மர் எல்லையில் மீண்டும் நிலஅதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி உள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலஅதிர்வால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.