Breaking News
கொளுத்துது வெயில் பிரசாரம் செய்ய தீபா மறுப்பு

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை சார்பில், ஜெ., அண்ணன் மகள், தீபா போட்டியிடுகிறார்.

நேற்று முன்தினம் காலை, 7:00 மணியளவில், தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பால சந்திப்பில் இருந்து, தீபா பிரசாரம் துவங்குவார் என, கூறப்பட்டது. ஆனால்,

இரண்டு மணி நேரம் தொண்டர்களை காக்க வைத்து, 9:00 மணியளவில் வந்தார்.

அங்கிருந்து, திறந்தவெளி வாகனத்தில் பிரசாரத்தை துவங்கிய தீபா, வெயில் தாங்க முடியாமல், சில மணி நேரத்தில், பின்னால் வந்த, ‘ஏசி’ காரில் அமர்ந்தபடி பிரசாரத்தை தொடர்ந்தார்.இந் நிலை யில், நேற்று காலை காசிமேடு பகுதியில், தீபா பிரசாரம் செய்வதாக இருந்தார். அவரது ஆதரவாளர் களும், அப்பகுதியில் கூடியிருந்தனர்.

ஆனால், 11:00 மணி வரை, அவர் வராததால் விரக்தி யடைந்த ஆதரவாளர்கள்,பிரசாரத்தை ரத்து செய்து விட்டதாக கூறி, கலைந்து சென்றனர்.பின், தண்டை யார்பேட்டை, நாகூரான் தோட்டம் பகுதியில், மாலை, 6:00 மணியளவில், தீபா பிரசாரம் செய்தார். இதுகுறித்து, தீபா ஆதரவாளர்கள் கூறுகையில், ‘வெயில் அதிகம் உள்ளதால், பகலில், தீபா
Advertisement

பிரசாரம் செய்ய மாட்டார். மாலை, 6:00 மணிக்கு மேல் தான், பிரசாரம் செய்ய திட்ட மிட்டுள்ளார். அப்போது, நடந்து சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுவார்’ என்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.