Breaking News
கடற்கொள்ளையர் பிடியில் இந்திய மாலுமிகள்

கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்ற சரக்கு கப்பல் மீட்கப்பட்டது. ஆனால், அதிலிருந்த இந்திய மாலிமிகள் 9 பேர் கடற்கொள்ளையர்கள் பிடியில் உள்ளதாக சோமாலிய நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சோமாலியா கடல்பகுதியில், கடற்கொள்ளையர்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பலை கடத்தி சென்றனர். இது குறித்து சோமாலியா பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் கிடைத்து அங்கு சென்றனர். இதனையறிந்த கொள்ளையர்கள், கப்பலில் இருந்த மாலுமிகள் 9 பேரை கடத்தி சென்று விட்டனர். கப்பலை மீட்ட பாதுகாப்பு படையினர், கடத்திசெல்லப்பட்ட மாலுமிகளை கடற்கொள்ளையர்கள் காட்டிற்குள் வைத்திருப்பார்கள் என்ற ரகசிய தகவலின் பேரில், அங்கு தேடி வருவதாகவும், கப்பலில் இருந்த 2 பேர் மட்டும் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.