Breaking News
‘இந்தியா – பாக்., எல்லையில் சுவர் எழுப்பும் திட்டமில்லை’: கிரண் ரிஜிஜு

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில், சுவர் எழுப்பும் திட்டம் எதுவும் இல்லை’ என, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

திட்டம் இல்லை:

ராஜ்யசபாவில் நேற்று கேள்வி நேரத்தின் போது, அவர் கூறியதாவது: இந்தியா – பாகிஸ்தான் எல்லையில், சுவர் எழுப்பும் திட்டம் எதுவும் இல்லை. அதேநேரத்தில், எல்லையில், பாதுகாப்பை பலப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தீவிர ரோந்து:

எல்லையில், தடுப்பு வேலியும், சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இரவை பகலாக்கும் வகையில், மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், அதி நவீன கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு, பயங்கரவாதிகள் ஊடுருவல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு படை வீரர்கள், ரோந்து பணியில் ஈடுபட, அதி நவீன ஆயுதங்களும், வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.