Breaking News
இமாசல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் பலி

தமிழ்நாட்டில் இருந்து ஒரு குழுவினர் இமாசல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றனர். புகழ்பெற்ற சுற்றுலா தலமான மணாலிக்கு ஒரு வேனில் அவர்கள் நேற்று சென்று கொண்டிருந்தனர்.

பிலாஸ்பூர் மாவட்டம் சதூல் என்ற மலைப்பிரதேசத்தில் வேன் சென்ற போது எதிர்பாராதவிதமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த ஜக்ரதி, ஜெயராமன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக பிலாஸ்பூர் ஆஸ்பத்திரிக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே என்.குமார் இறந்தார். மலைப்பிரதேச வளைவை வேன் டிரைவர் சரியாக கவனிக்க தவறியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக வேனில் சென்ற தமிழக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.