Breaking News
2019ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ., அதிக இடங்களை பிடிக்கும்: வெங்கையா நாயுடு

2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணி அதிக இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சியமைக்கும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

அதிக வெற்றி:

இதுகுறித்து ஜெய்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் தெரிவித்ததாவது: கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 282 தொகுதிகளை பிடித்து பா.ஜ., ஆட்சி அமைத்தது. தற்போது பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால் வரும் 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ., கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்.

பொய் பிரசாரம் :

கடந்த மூன்றாண்டு பா.ஜ., ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை. மக்களின் கவனத்தை திசை திருப்ப எதிர் கட்சிகள் பொய்யான பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். எதிர்கட்சிகள் தலைவர்களில் பலர் ஜெயிலிலும், சிலர் பெயிலிலும் உள்ளனர். அவர்கள் அனைவரும் அரசியலில் இருந்து வெளியேறிவிட்டனர். சாதி, மதம் மூலம் அரசியல் செய்வோர் இனி மக்களை ஏமாற்ற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.