Breaking News
கணவரை விவாகரத்து செய்ய இந்தி நடிகை மலைகா ரூ.15 கோடி ஜீவனாம்சம் கேட்கிறார்

கணவரை விவாகரத்து செய்ய இந்தி நடிகை மலைகா ரூ.15 கோடி ஜீவனாம்சம் கேட்கிறார்.

விவாகரத்துகள்
இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும், சுசானேவும் சமீபத்தில் விவாகரத்து செய்து பிரிந்தனர். மணிஷா கொய்ரலா, கரீஷ்மா கபூர் ஆகியோரும் கணவரை பிரிந்தார்கள்.

தற்போது இந்தி நடிகை மலைகா அரோராவும் விவாகரத்துக்கு தயாராகி இருக்கிறார். இவர் சினிமா மற்றும் விளம்பர படங்களில் நடித்து பிரபலமானவர். ஒரு பாடலுக்கு நடனம் ஆடியும் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில், ஷாருக்கான் நடித்து இந்தியில் வெளியான ‘தில் சே’ படத்தில் இடம்பெற்ற ‘சைய சைய சையா’ என்ற பாடலில் மலைகா ஆடிய நடனம் பிரபலமாக பேசப்பட்டது. வெளிநாடுகளிலும் இந்த பாடல் வரவேற்பை பெற்றது. ‘தில் சே’ படம் தமிழில் ‘உயிரே’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்ட போது அந்த பாடல் ‘தைய தைய தையா’ என்ற வரிகளில் வெளிவந்து தமிழகத்திலும் பிரபலமானது.

சல்மான்கான் தம்பி
மலைகா அரோரா இந்தி படங்களை தயாரித்தும் இருக்கிறார். இவரும் இந்தி நடிகர் அர்பாஷ்கானும் விளம்பர படப்பிடிப்பு ஒன்றில் சந்தித்து காதல் வயப்பட்டு 1998–ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அர்பாஷ்கான் இந்தி நடிகர் சல்மான்கானின் தம்பி ஆவார். இவர்களுக்கு 14 வயதில் அர்ஹான் கான் என்ற மகன் இருக்கிறார்.

மலைகாவின் ஆபாச படம் சில மாதங்களுக்கு முன்பு இணையதளங்களில் வெளியானதாக பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குடும்ப வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டு கணவரை அவர் பிரிந்தார். மும்பையில் உள்ள பாந்த்ரா கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்து இருக்கிறார். இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயற்சி செய்தும் பலன் இல்லை.

ரூ.15 கோடி ஜீவனாம்சம்
விவாகரத்து பெறுவதில் மலைகா உறுதியாக இருக்கிறார். தனக்கு ஜீவனாம்சமாக கணவர் ரூ.15 கோடி வழங்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் அர்பாஷ்கான் பண கஷ்டத்தில் இருப்பதால் அவ்வளவு தொகையை அவரால் கொடுக்க முடியுமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது என்று இந்தி பட உலகினர் கூறுகிறார்கள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.