Breaking News
2018-ம் ஆண்டு நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை ரத்தாகிறது

ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடர் கடந்த 2007-ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2016-ல் இந்த தொடர் இந்தியாவில் நடத்தப்பட்டது. 7-வது டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு நடத்தப்பட வேண்டும்.

ஆனால் ஐசிசி-யில் உறுப்பினர்களாக உள்ள பல்வேறு நாடுகள் இருதரப்பு தொடர்களில் பிஸியாக உள்ளன. இதனால் 2018-ம் ஆண்டுக்கான டி 20 உலகக் கோப்பை தொடரை கைவிட ஐசிசி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனை ஐசிசி-க்கு நெருக்கமான வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன. அதேவேளையில் 2020-ம் ஆண்டு மீண்டும் டி20 உலகக் கோப்பை நடத்தப்படும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது. தென் ஆப்ரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவில் இந்த தொடர் நடத்தப்படும் என தெரிகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.