Breaking News
அராஜக கூட்டத்திடமிருந்து காப்பாற்றுவேன்: தீபா பரபரப்பு பேச்சு

தமிழக மக்களையும், அ.தி.மு.க.,வையும் அராஜக கூட்டத்திடம் இருந்து காப்பாற்றுவதே தன் ஒரே லட்சியம் என ஜெ., அண்ணன் மகள் தீபா தெரிவித்தார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தன்னை சந்திக்க வந்த ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் இப்போது மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஜெ., வழியில் மீண்டும் நல்லாட்சி மலரும் நம்பிக்கையில் தொடர்ந்து பணி செய்வோம்.

தமிழக மக்களையும், அதிமுகவையும் அராஜக கூட்டத்திடம் இருந்து காப்பாற்றுவது தான் எனது ஒரே லட்சியம். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். என்னை நம்பி வந்தவர்களை காப்பாற்றுவேன். ஜெ., வழியில் நடப்பேன். உங்களுக்காக நான் இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி : தினமலர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.