Breaking News
அக்கா மயங்கி விழுந்ததால் தங்கைக்கு தாலிக்கட்டிய மாப்பிள்ளை

திருச்சியில் திருமணத்தின் போது மணப்பெண் மயங்கி விழுந்ததால், அவரது தங்கைக்கு மாப்பிள்ளை தாலிகட்டினார்.

திருச்சி துறையூர் அருகே உள்ள ஒட்டம்பட்டியைச் சேர்ந்த பாலகுமார்(27) என்பவருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா(20) என்பவருக்கும் நேற்று திருமணம் நடை பெற இருந்தது.

திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண் சரண்யா விஷம் அருந்தி மயக்கம் அடைந்த நிலையில் தனது அறையில் கிடந்தார். உடனே அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். கல்லூரி படித்துக்கொண்டிருந்த சரண்யாவுக்கு திருமணத்தில் விரும்பம் இல்லாமல் விஷம் குடித்தது தெரியவந்தது.

இதனால் மணமகன் வீட்டார் மணமகள் வீட்டார் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மணமகன் வீட்டாரிடம் பேச்சு வார்த்தை நடத்திய மணமகள் வீட்டார்கள் சரண்யாவின் தங்கையை திருமணம் செய்துத்தர முடிவு செய்தனர்.

பின் சரண்யாவின் தங்கையின் ஒப்புதலோடு திருமணம் நடைப்பெற்றது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.