Breaking News
கடந்த கால வரலாற்றில் இருந்து இந்தியா பாடம் கற்று கொள்ள வேண்டுமாம்: சீனா திமிர் பேச்சு

கடந்த கால வரலாற்றை நினைத்து பார்த்து சீனாவிடமிருந்து இந்தியா பாடம் கற்று கொள்ள வேண்டும் என சீனா கூறியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான சிக்கிம் மாநிலத்தில் சீனா- இந்தியா-பூட்டான் எல்லையில் மையப்பகுதியான டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் நம் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடி செய்து வருகிறது.கடந்த சில நாட்களுக்கு முன் சீன- இந்திய ராணுவ வீரர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. பூட்டான் நாட்டிற்குள்ளும் சீனா அத்துமீறி நுழைகிறது.

இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லூ காங்க், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது புகைப்படம் ஒன்றை காண்பித்தார். பின்னர் அவர் கூறுகையில்: ‛‛ சீன எல்லையில் இருந்து இந்திய வீரர்கள் படைகளை விலக்கி கொள்ள வேண்டும். கடந்த 1962 ம் ஆண்டு இந்திய-சீன போரில் இந்தியா தோற்றுப்போன வரலாறு அவர்களுக்கு தெரியும். இந்திய-சீன எல்லை பிரச்னை இன்று வரை தீரக்கப்படவில்லை. எனவே கடந்த கால வரலாற்றை நினைத்து பார்த்து சீனாவிடம் இருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.