Breaking News
சிரியாவில் கார் குண்டு வெடிப்பு : 18 பேர் உடல் சிதறி பலி

சிரியாவில், பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பில், 18 பேர் கொல்லப்பட்டனர்.மேற்காசிய நாடான, சிரியாவின் பெரும்பகுதி, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் மீது, அமெரிக்க கூட்டணி படையும், ரஷ்யா தலைமையில், சிரியா அரசு படைகளும், தனித்தனியே தாக்குதல் நடத்தி வருகின்றன.இந்நிலையில், தலைநகர் டமாஸ்கசில், நேற்று வெடிகுண்டுகள் நிரப்பட்ட மூன்று கார்கள் வேகமாக வந்தன. அவற்றில் இரண்டை, பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்து நிறுத்தினர். எனினும், அவை வெடித்து சிதறின.
மற்றொரு கார் டமாஸ்கசின் மையப்பகுதியான தாஹிர் சதுக்கம் அருகே பாதுகாப்பு படை வீரர்கள் இருந்த பகுதிக்கு சென்றதும், அதில் இருந்த தற்கொலை படை பயங்கரவாதி குண்டை வெடிக்க செய்தான்.கார் வெடித்து சிதறியதில், அந்த பகுதியில் உள்ள கட்டடங்கள் இடிந்ததுடன், அருகில் இருந்த வாகனங்களும் சேதமடைந்தன. குண்டுவெடிப்பில், பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட, 18 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.குண்டு வெடிப்புக்கு, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.