Breaking News
கட்சியில் இணைத்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார்: மு.க. அழகிரி

மு.க. அழகிரி வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து கருணாநிதியின் நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்த உள்ளார். இதில் ஒரு லட்சம் பேர் வரை திரட்டிக் காட்டுவதற்கான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இதற்காக தினமும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இன்றும் அவர் 7-வது நாளாக ஆலோசனையில் ஈடுபட்டார்.

மு.க அழகிரி கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே செப்டம்பர் 5ஆம் தேதி பேரணி நடைபெறவுள்ளது என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். மேலும் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வானது பற்றி கருத்து கூற ஒன்றுமில்லை .

தி.மு.கவில் எங்களை சேர்த்து கொண்டால் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். கட்சியில் சேர்த்து கொண்டால் ஸ்டாலினை தலைவராக எற்று கொள்ளத்தானே வேண்டும். கட்சியில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.