Breaking News
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திடீர் ஆய்வு ஆலின் ஜோஸ்  மேரி  ஜெய்குமாருக்கு பாராட்டு

சென்னை குறளகத்தில் உள்ள பேரூராட்சிகளின் இயக்குனர் பழனிச்சாமி ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் நடைப்பெற்ற மற்றும் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய பேரூராட்சிகளின் இணை இயக்குனர் ஆலின் ஜோஸ் மேரிக்கு உத்தரவிட்டார் அதன் பேரில் ஆலின் ஜோஸ் மேரி எந்த வித முன்னறிவிப்பின்றி ஊத்துக்கோட்டை நகருக்கு வருகை தந்தார். பேரூராட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று டிரைனேஜ், கழிப்பிட வசதி, டேங்க் பணிகள், தெரு விளக்குகள், சாலை வசதி, குடிநீர் வசதி , சுகாதாரவசதி குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார் அப்பொழுது பொதுமக்கள் தற்போதுள்ள செயல் அலுவலர் ஜெய்க்குமார் மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்து வருகிறார். மேலும் பல்வேறு பணிகள் குறித்து ஆலின் ஜோஸ் மேரி நேரடி ஆய்வு மேற்கொண்டார் பணிகள் தரமாகவும் விரைந்து முடித்திருப்பதால் செயல் அலுவலர் ஜெய்க்குமாருக்கு பாராட்டு தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.