Breaking News
லட்சக்கணக்கான மக்களை வறுமையின் பிடியில் இருந்து இந்தியா வெற்றிகரமாக மீட்டுள்ளது: டிரம்ப் பாராட்டு

லட்சக்கணக்கானோரை வறுமையின் பிடியில் இருந்து இந்தியா வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொது சபையில் நடைபெற்ற பொது விவாதத்தில், இதுகுறித்து அவர் பேசுகையில், 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட இந்தியா, சுதந்திரமான சமூகத்தை கொண்டது. வறுமையின் பிடியில் இருந்து லட்சக்கணக்கானோரை வெற்றிகரமாக இந்தியா மீட்டெடுத்துள்ளது என்றார்.ஐ.நா. பொது சபையில் நடைபெற்ற பொது விவாதத்தில் டிரம்ப் பேசுவது இதுவே 2ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இந்நிலையில் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனத்தை வாங்கிய சீனா மீது அமெரிக்கா சில தடைகளை அண்மையில் விதித்தது. இதேபோல், ரஷியாவிடம் இருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனம் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை வாங்கினால், இந்தியா மீதும் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், நியூயார்க்கில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை திங்கள்கிழமை சந்தித்தபோது, இந்தியாவை தாம் நேசிப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். அதேபோல், இந்தியா சுதந்திரமான சமூகத்தை கொண்டது என்று டிரம்ப் தற்போது புகழாரம் சூட்டியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.