Breaking News
நீரவ் மோடியின் ரூ.637 கோடி சொத்துக்கள் முடக்கம்

வங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நீரவ் மோடியின் ரூ.637 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று, மோசடி செய்த விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.216 கோடி மதிப்பிலான இரண்டு அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. நீரவ் மோடி மீதான நிதி மோசடி வழக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீரவ் மோடிக்கு வெளிநாடுகளில் உள்ள 5 வங்கிகளில் கணக்குகள் இருப்பதாகவும், அவற்றில் உள்ள ரூ.278 கோடியும் முடக்கப்பட்டுள்ளாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில் இருந்து ரூ.22.69 கோடி மதிப்பிலான வைரம் பொறிக்கப்பட்ட தங்க நகைகளும் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தெற்கு மும்பையில் உள்ள ரூ.19.5 கோடி மதிப்பிலான வீடும் முடக்கப்பட்ட சொத்தில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.