Breaking News
ஒபாமா, கிளிண்டனை கொல்ல திட்டமா ? பதற்றத்தில் அமெரிக்கா!

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், ஒபாமா ஆகியோர்களின் வீடுகளுக்கு முன் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக எஃப்பிஐ தெரிவித்துள்ளது.

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் நியூயார்க்கின் சபாக் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் அவர்களின் வீட்டுக்கு முன்பு சக்திவாய்ந்த வெடிகுண்டை பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றினர். வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட சமயம் பில்கிளிண்டனும், ஹிலாரியும் வீட்டில் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு சக்திவாய்ந்தவை என்றும், மிகவும் பாதுகாப்பான இடத்திற்கு எப்படி வெடிகுண்டு வந்தது, இதற்கு பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் எஃப்பிஐ தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக முன்னாள் அதிபர் ஒபாமா வீட்டிற்கும் தபாலில் வெடிகுண்டு அனுப்பப்பட்டுள்ளது. தபாலில் வந்த வெடிகுண்டை பாதுகாப்பு அதிகாரிகளை கைப்பற்றி செயலிழக்கச்செய்தனர். முன்னாள் அதிபர்கள் வீடுகளில் அடுத்தடுத்து வெடுகுண்டு பார்சல்கள் கைப்பற்றப்பட்டது அமெரிக்க மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ர்ம்ப், ”வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட சம்பவம் அருவருக்கத்தக்க செயல். எந்த வகையிலும் பயங்கரவாதம் நுழைவதை அமெரிக்கா அனுமதிக்காது. அமெரிக்க மக்களை பாதுகாப்பதே எனது அரசின் முக்கிய குறிக்கோள்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மெலானியா டிரம்ப் , ”வெடிகுண்டு அனுப்பப்பட்டது ஒரு கோழைத்தனமான செயல்” என தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.