Breaking News
கல்லூரி மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வீடியோ வெளியிட்ட 7 பேர் கைது

பீகார் மாநிலம் பேகுசராய் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் உள்ள நான்கு மாணவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். இதில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 4 பேரும் டவுன் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட போக்ரியா பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மாணவர் குஷ்வாஹா விடுதியில் இருந்து
கடந்த புதன்கிழமை காளி அஸ்தான் சவுக்கில் இருந்து கடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.மாணவர்கள் பேகுசராய் பிரதேச சிறைக்கு பின்னால் கொண்டுச் செல்லபட்டு தாக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் உடலுறவு மற்றும் ஒருவருக்கொருவர் இயற்கைக்கு மாறான பாலியல் செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர். பின்னர் மிரட்டி 18-21 வயதிற்கு உட்பட்ட அனைத்து கல்லூரி மாணவர்களையும் மதுபானம் குடிக்கச் செய்தனர். நாள் முழுவதும் அதிர்ச்சியூட்டும் செயல்கள் தொடர்ந்து உள்ளது.

குற்றவாளியின் ஒருவரிடம் சொந்தமான ஒரு ஆலையில் இருந்து தண்ணீர் வாங்க மறுத்ததன் காரணமாக மாணவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

குற்றவாளிகள் சம்பவத்தை வீடியோ எடுத்து உள்ளதாகவும் மாணவர்கள் புகார் அளித்தால் இணையத்தில் வெளியிடப்படும் என அச்சுறுத்தி உள்ளனர். இந்த வீடியோ கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து போலீசார் 7 பேரை கைது செய்து உள்ளனர். பாதிக்கபட்ட மாணவர்கள் சர்தார் மருத்துவமனியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.