Breaking News
ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய 3 பேர் ரெயில் மோதி பலி

டெல்லி நங்லாய் ரயில் நிலையம் அருகே 3 பேர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து கொண்டு மது அருந்திக்கொண்டிருந்தனர். போதை தலைக்கு ஏற அவர்கள் ரயில் தண்டவாளத்தில் உற்சாகமாக நடனமாடிக்கொண்டிருந்தனர். இந்தநிலையில், சுமார் 7.30 மணி அளவில் அந்த வழியாக பிகானெர்-டெல்லி எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்துகொண்டிருந்தது.
போதையில் இருந்த இளைஞர்கள் ரயில் வருவதை தெரியாமல் நடனமாடிக்கொண்டிருந்தனர். கடைசி நேரத்தில் ரெயில் வருவதை கண்ட 3 பேரும் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் அவர்கள் தண்டவாளத்தை கடக்க முடியவில்லை இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார், அவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இறந்தவர்கள் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து தெரியவில்லை.

எனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு அமிர்தசரசில் ரயில் மோதி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.