Breaking News
தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்

சட்டசபைக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பழனிசாமியிடம் வாழ்த்து பெற்று பட்ஜெட் உரையுடன் அவைக்கு வந்தார். காலை 10 மணியளவில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 8 வது பட்ஜெட்.

பட்ஜெட் உரைக்கு பிறகு, இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக, சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.