Breaking News
இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தற்காலிக தடை விதித்துள்ளது.

டில்லியில் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் புல்வாமா தாக்குதலை அடுத்து, இப்போட்டிகளில் பங்கேற்க வரும் பாக்., வீரர்களுக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு தெரிவித்தது. இந்தியாவின் இந்த செயலுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்தது.

இதனையடுத்து இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தற்காலிகமாக தடை விதித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது. இந்தியா உரிய விளக்கம் தரவும் ஒலிம்பிக் கமிட்டி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய அரசு உரிய விளக்கமும், உத்தரவாதமும் அளிக்காத வரை இந்த தடை விலக்கிக் கொள்ளப்படாது எனவும் ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.