Breaking News
ரகசியம் காக்க வேண்டும்: ரயில்வே உத்தரவு

ரயில்களில் ராணுவ வீரர்கள் தங்கள் பயணத்தை யாரிடமும் சொல்லாமல், ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற, ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு, சமீபத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது. இதில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, மண்டல அலுவலகங்களுக்கு, ரயில்வே பிறப்பித்த உத்தரவில், ‘ரயில்களில் ராணுவ வீரர்கள் பயணம் செய்வதையோ, ராணுவ உபகரணங்கள் எடுத்து செல்வதையோ, யாரிடமும் சொல்லாமல், ரகசியமாக வைத்திருக்க வேண்டும்’ என, கூறப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.