Breaking News
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை குறித்து ஐகோர்ட்டில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. தற்போது வரை நடைபெற்ற விசாரணையின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தது சிபிஐ.

அதில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாகவும், அதிகாரிகள் தொடர்பு சம்பந்தமாகவும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பல்வேறு துறைகளிடமிருந்து ஆவணங்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சிசிடிவி பதிவுகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பலியான 13 பேரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கலவரத்தில் காவல் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளின் பங்கு, போராட்டக்காரர்களின் பங்கு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என கூறப்பட்டு உள்ளது.

தற்போது வரை நடைபெற்ற விசாரணையின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தது சிபிஐ. செப்டம்பர் 16ந் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.