Breaking News

 

அயப்பாக்கத்தில் மின்சாதனப் பொருட்களை திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு , சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் இளங்கோ (வயது 38) .இவர் அயப்பாக்கம் ஜெயின் நகரில் சொந்தமாக வீடுகட்டி வருகிறார்.கட்டிடப் பணிகள் முடிந்து மின்சாதனப் பொருட்கள் பொருத்துவதற்காக ,ரூ1. 50 லட்சத்தில் மின்சாதனம் வாங்கி , புதிய வீட்டில் வைத்துள்ளார்.
இதனை நோட்டமிட்ட திருடர்கள் மின்சாதப் பொருட்களை கொள்ளை அடித்து சென்றனர்.
இதுபற்றி இளங்கோ திருமுல்லைவாயல் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
ஆய்வில் ஆவடியை அடுத்த ஆரிக்கம்பேட்டைச் சேர்ந்த வினோத் (வயது 30) மற்றும் சம்பத் ஆகிய இருவரும் மின்சாதனப் பொருட்களை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதனால் போலீசார் இருவரும் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து ரூ 1 .50 மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன.
இதுபற்றி திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்ட 2 வாலிபர்களையும் , அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜன்படுத்தி , புழல் சிறையில் அடைத்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.