ஜப்பானில் வெள்ளப்பெருக்கு : ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
ஜப்பானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்துக்கு, இருவர் இறந்தனர்; பலரை காணவில்லை. ஆயிரக்கணக்கானோர், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆசிய நாடான ஜப்பானின் தெற்கு பகுதியில், இரு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கியுசு தீவில் மட்டும், 50 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இதனால், தெற்கு ஜப்பானில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.ஜப்பான் துணை பிரதமர், டாரோ ஆசோ கூறுகையில், ”ஜப்பானுக்கு, இது மிகப் பெரும் சோதனை. வெள்ளப் பெருக்கால், பள்ளி கட்டடங்கள், வீடுகள் பெரும் சேதம் அடைந்துள்ளன. இதுவரை, இரண்டு பேர் இறந்துவிட்டனர்; பலரை காணவில்லை. மீட்பு பணியில் ராணுவமும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்,” என்றார்.ஜப்பானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்துக்கு, இருவர் இறந்தனர்; பலரை காணவில்லை. ஆயிரக்கணக்கானோர், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ஆசிய நாடான ஜப்பானின் தெற்கு பகுதியில், இரு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கியுசு தீவில் மட்டும், 50 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இதனால், தெற்கு ஜப்பானில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.ஜப்பான் துணை பிரதமர், டாரோ ஆசோ கூறுகையில், ”ஜப்பானுக்கு, இது மிகப் பெரும் சோதனை. வெள்ளப் பெருக்கால், பள்ளி கட்டடங்கள், வீடுகள் பெரும் சேதம் அடைந்துள்ளன. இதுவரை, இரண்டு பேர் இறந்துவிட்டனர்; பலரை காணவில்லை. மீட்பு பணியில் ராணுவமும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்,” என்றார்.