Breaking News
அருணாச்சல பிரதேசம்: இந்தியா-சீனா எல்லை அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தியா- சீனா எல்லை அருகே இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திபெத்தில் உள்ள சிசாங் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவானது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சில வினாடிகள் உணரப்பட்டது. இந்தியா-சீனா எல்லையையொட்டியுள்ள பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால், உயிர்சேதம் அல்லது பொருட்சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.