Breaking News
48 நாடுகள் களமிறங்கும் உலகக்கோப்பை..!

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஃபிஃபா உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டி கடைசியாக 2014-ம் ஆண்டு நடைபெற்றது. ஃபிஃபா நடத்தும் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் வழக்கமாக 32 நாடுகள் பங்கேற்கும். இனிவரும் போட்டிகளில் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எண்ணத்தில் இருக்கிறது ஃபிஃபா. அதன்படி 2026-ம் ஆண்டு நடக்கவிருக்கும் அடுத்த உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியில், 32 நாடுகளுக்கு பதிலாக 48 நாடுகள் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஃபிஃபா-வின் தலைவர் கயானி இன்ஃபானிட்டோ கூறுகையில் ‘கால்பந்து விளையாட்டை இன்னும் பிரபலப்படுத்தவும், அதன் சுவாரசியத்தை எல்லா நாடுகளும் அனுபவிக்கும் நோக்கத்தின் அடிப்படையிலுமே, நாடுகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 64 போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டன. இனி அவை 80 போட்டிகளாக அதிகப்படுத்தப்படும்` என்றார்.

நன்றி : விகடன்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.