Breaking News
ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் 12 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் வடக்கே பால்க் பகுதியில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் 11 பேர் உள்பட 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியது.

இதில் 12 பேர் பலியாகினர். அவர்களில் 2 பேர் உக்ரைன் நாட்டை சேர்ந்த விமானிகள். 3வது விமானி இந்த விபத்தில் இருந்து தப்பினார். இதனை அந்நாட்டு பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது. மற்றொரு தகவல் பலி எண்ணிக்கை 13 என்றும் வெளிநாட்டு விமானி தவிர அனைவரும் உயிரிழந்து விட்டனர் என்றும் தெரிவிக்கின்றது.

இந்த ஹெலிகாப்டரில் வெடிபொருட்கள் இருந்தன. அவை மோதி கொண்டதில் வெடித்துள்ளன. இதில் கருகிய உடல்களை அடையாளம் காண முடியவில்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.