Breaking News
குடும்பம் நடத்தவே கஷ்டப்பட்டாலும், தன் மனைவிக்காக ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்த அபிராமியின் கணவர்

கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளையே கொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் அபிராமியின் கணவர் தன் குடும்பத்தில் ஏற்பட்ட பூகம்பத்தை நம்ப மறுத்து இன்னும் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருக்கிறார். குன்றத்தூர் காவல் நிலையத்துக்கு வந்த விஜய் அங்குள்ள காவலர்களிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அபிராமியின் கணவர் விஜய் போலீசாரிடம் கூறியதாவது:

இதுவரை குழந்தைகளை ஒருமுறை கூட அடிக்காத தன் மனைவி, அவர்களை கொன்றிருக்கும் அதிர்ச்சியில் இருந்து மீண்டுவர முடியவில்லை.
தன் குழந்தைகளின் படிப்பிலிருந்து, அவர்களது தேவைகள் அனைத்தையும் கவனித்து கொண்டது, தனது மனைவிதான்.

தன் முன்பு ஒரு நாள் கூட குழந்தைகளை அடிக்காத அபிராமி, கள்ளக்காதல் வலையில் விழுந்த பிறகு அவர்களையே கொல்லத் துணிந்தது பெரும் அதிர்ச்சி அளித்தது.

குடும்பம் நடத்தவே கஷ்டப்பட்டலும், தன் மனைவிக்காக இரு சக்கர வாகனம் வாங்கிக் கொடுத்தேன். அந்த வாகனத்திலும் தன் இரு குழந்தைகளின் பெயரை எழுதிக் கொடுத்தேன்.

வெகுநேரம் அந்த காவல் நிலையத்தில் தனிமையில் இருந்த விஜய் தலை கவிழ்ந்து அழுது கொண்டே இருந்தார்.

ஸ்கூட்டி வந்த பிறகே, அபிராமியின் நட்பு வட்டம் விரிவடைந்துள்ளது. விஜய் அலுவலகம் சென்ற பிறகு, இரு சக்கர வாகனத்தில் குன்றத்தூரை வலம் வருவாராம், அபிராமி. அப்படித்தான் சுந்தரத்துடன் நெருக்கம் அதிகரித்ததாக தற்போது தெரிய வந்துள்ளது.

அந்த வட்டாரத்தில் அபிராமியை மட்டுமே எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. தற்போதைய அதிர்ச்சி சம்பவத்துக்குப் பிறகுதான் விஜயின் பெயரே வெளியில் தெரிய வந்திருக்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.