Breaking News
ஆந்திரா: அருவியில் அடித்து செல்லப்பட்ட சென்னை மாணவர்கள் உடல்கள் மீட்பு

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அருகே உள்ள சித்தேஸ்வரகோணா அருவியில் குளிப்பதற்காக சென்னை ஈஸ்வரி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 17 பேர் 7 மோட்டார் சைக்கிள்களில் சென்றனர்.

அவர்கள் அங்குள்ள அருவி தடாகத்தில் குளித்தபோது விஜய்ஆனந்த் என்ற மாணவர் மாயமானார். அவரை தேடியும் கிடைக்கவில்லை. சிலம்பரசன் என்ற மாணவர் அருவியில் குதித்து தேடினார். அவரும் அருவி தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். அவர்களை தீயணைப்பு படைவீரர்களும் போலீசாரும் தேடி வந்தனர். 15 மணி நேர தேடுதலுக்கு பின்னர் விஜய்ஆனந்த், சிலம்பரசன் ஆகியோரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.