Breaking News
மீ டூ விவகாரம்: தைரியமாக பேசும் அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாராட்டுக்கள் -ஏ.ஆர்.ரஹ்மான்

சமீபத்தில் ஏ. ஆர். ரஹ்மானின் சகோதரி ரைஹானா மீ டூ பற்றி கருத்து தெரிவித்தார். வைரமுத்து எப்படிப்பட்டவர் என்பது சினிமா துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும். அவரை பற்றி பல பெண்கள் என்னிடம் வந்து புகார் தெரிவித்துள்ளனர் என்றார். இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.
மீ டூ இயக்கத்தை கவனித்து வருகிறேன். தொல்லை கொடுத்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்று சில பெயர்கள் எனக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. நம் துறை பெண்களுக்கு பாதுகாப்பானதாக மாறுவதை பார்க்க விரும்புகிறேன். தைரியமாக பேசும் அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாராட்டுக்கள். அனைவரும் பாதுகாப்புடன் பணியாற்றும் சூழலை நானும், என் அணியும் உருவாக்கி வருகிறோம். பாதிக்கப்பட்டவர்கள் பேச சமூக வலைதளங்கள் சுதந்திரம் அளிக்கிறது. ஆனால் அதை தவறாக பயன்படுத்திவிடாமல் இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
pic.twitter.com/VmkhntI5ho

— A.R.Rahman (@arrahman) October 22, 2018

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.