Breaking News
ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் உள்ள ஸாகு அரிசால் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில், விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் அவ்விடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து, சுதாரித்த பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த பயங்கர துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.