Breaking News
ஆர்.கே.நகர் தொகுதிக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு: ராஜேஷ் லக்கானி தகவல்

சென்னை:பிப்.3
சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவால் காலியானதாக அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜுன் 5-ந்தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.
இடைத்தேர்தல் மே மாதம் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் இதற்கான உரிய அறிவிப்பை விரைவில் குறித்த நேரத்தில் வெளியிடும்.
இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்பட்டது. புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்த 15 லட்சத்து 26 ஆயிரத்து 985 வாக்காளர்களில், 2 லட்சத்து 32 ஆயிரத்து 974 பேர் மட்டும் தங்களது செல்போன் எண்களை பதிவு செய்து உள்ளனர்.
அவர்களுக்கு மட்டும் தேசிய வாக்காளர் தினத்தில் (ஜன.25) இருந்து எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு வருகிறது. அதில் உள்ள ரகசிய குறியீட்டு எண்ணை அருகில் உள்ள இணைய சேவை மையங்களில் காண்பித்து வண்ண வாக்காளர் அட்டையை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
புதிய வாக்காளர்கள் 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்தால் இலவச சேவை பெற அவர்களுக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.