Breaking News
ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் முறையீடு

தமிழக சட்டசபை கூட்டத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வறுமை கோட்டிற்கு கீழுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என கூறினார்.

ஏழை தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தடைசெய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் முறையீடு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

சட்டப்பஞ்சாயத்து அமைப்பை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்து உள்ளார். அதில் 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதியாக வழங்குவதை தடை செய்ய வேண்டும். ரூ.2 ஆயிரம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது சட்டவிரோதம் என கூறி உள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.