Breaking News
போலீசார் செயல்பாடுகள் குறித்து ஆய்வு: மத்திய அரசு திட்டம்

நாடு முழுவதும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட சேவைகளில், போலீசாரின் செயல்பாடுகள் குறித்து, பொது மக்களிடம் ஆய்வு நடத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 173 மாவட்டங்களில், 1.2 லட்சம் பேரிடம், போலீசாரின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்படும்.

இந்த ஆய்வு, அடுத்த மாதம் துவங்குகிறது. ஆய்வுக்கு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.